Monday 19 October, 2009

வண்ணத்துப்பூச்சிகள்

இறைவன் உலகை படைத்துவிட்டு
அதற்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்தான்.
அப்போது வண்ண பூச்சு
பல இடங்களில் சிந்திக்கிடந்தது.
அந்த துளிகளுக்கும் உயிர்க்கொடுக்க எண்ணிய இறைவன்
அவற்றுக்கு சிறகையும் கொடுத்து பறக்கச் செய்தான்.