Sunday 24 August, 2008

அந்த இயற்கையோடு நான்!



சமீபத்தில் கேரளம் சென்றிருந்தோம். அங்கே அதிரம்பள்ளி நீர்விழிசியின் அருகே நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது!


கேரளம் செல்வதற்காக எல்லோரும் தொடர்வண்டி நிலையத்திற்குள் வேகமாக சென்றுகொண்டிருந்தோம். அப்போது ஒருத்தி, அவள் என் ரயில் ஸ்னேகிதி, என் தோள்களில் கைவைத்து "How is newly married life?" என்றாள். எனக்கு அவள் பெயர் ஞாபகம் இல்லை. சிரித்துக்கொண்டே அவளை பார்த்து உங்களிடம் எனக்கு திருமணமாகிவிட்டதென்று யார் சொன்னார்கள் என்று கேட்டேன். அவள், 'உங்களை பார்த்தாலே தெரிகிறதே' என்றாள். அப்படி என்ன தெரிகிறதென்றேன். எங்கள் அலுவலக அடையாள அட்டை நிறம் மஞ்சள். அதை பார்த்துவிட்டு அவள் இப்படி எனக்கு திருமணமாகிவிட்டதென்று நினைத்திருக்கிறாள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று அவளிடம் சொல்லிவிட்டு, நாங்கள் சுற்றுலா செல்வதையும் அவளிடம் சொல்லிவிட்டு, என் பயணத்தை தொடர்ந்தேன். அவள் பெயர் தான் இன்றும் எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை.