Sunday 29 November, 2009

மௌனம் பேசியவை!

அவள் எப்படி என்று என்னிடம் யாராவது கேட்டால் நான் எங்கிருந்து ஆரம்பிப்பது?

என்னையே நான் முற்றிலும் அறியாத நிலையில் இறைவன் படைத்த இன்னொரு பாத்திரத்தை பற்றி நான் விமர்சனம் செய்வதா?

சரி ஞானக்கண் திறந்து நான்கு வார்த்தை அவளை பற்றி சொல்லவா?
என் friendu நல்லவ வல்லவ நாலும் தெரிஞ்சவ..

* ஒரு கூட்டு குடும்பத்தில வளர்ந்ததால வயதுக்கு மீறின பொறுமை அவளிடம் இருக்கும். அதுக்காக குறும்புத்தனம் பண்ணாமலாம் இருக்க மாட்டாள். வாலுத்தனம் இருக்கத்தான் செய்யும்.(point to be noted)

* எந்த கலையையும் அவளால் ரசிக்க முடியும். அவள் ஒரு நல்ல ரசிகை.

* முற்றிலும் அமைதியாக இருக்கும் அவள் முகத்தில் சட்டென்று வந்து செல்லும் உணர்வு வெளிபாடுகள், அவளை முழுவதுமாக வெளிப்படுத்தும். Romba Romba Romba expressive :)

* அலுவலக வேலையை கூட அவள் தன் முழுமனதையும் ஒப்புவித்து செய்வாள்.

* ஒரே ஒரு முறைதான் என்னிடம் அவள் தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளால். நாங்கள் இருவரும் நாங்கரை வருடங்களாக பழகி வருகிறோம். :) கோபத்தை வெளிப்படுத்தும் RATIO Romba Romba குறைவு.

* அவள் தன்னை பற்றி என்னிடம் எதுவும் சொல்வதிலை என்கிற எண்ணம் எனக்குள் வந்ததுண்டு, அவள் மௌனத்தை உணரும் நிலை என்னிடம் வந்தபின் அந்த எண்ணம் மறைந்துதான் போனது.

அவளை அறிந்துகொள்ள சில வருடங்காளாவது காத்திருக்கதான் வேண்டும்!!!