Tuesday 20 May, 2008

நினைவுகள்..










எங்கள் வீட்டின் கண்ணாடி ஜன்னலுக்கு பின்னால் இருந்து எடுத்த புகைப்படங்கள் இவை. அந்த சிறுவன் இப்படி விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து எனக்கும் அதே போல் விளையாட ஆசையாக இருந்தது. சிறிது நேரத்தில் அவனுடைய தோழர்களும் தோழிகளும் அங்கு குவிந்து விட்டனர். எல்லோரும் இதே போல் சில அட்டைகளைக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர். வெகு நேர யோசனைக்கு பிறகு நானும் களமிரங்கினேன். அங்கிருந்த ஒரு சிறுவனிடம் "என்னையும் சேர்த்துகொள்கிறீர்களா" என்று கேட்டேன். நான் எதிர்பார்க்காத அளவு உற்சாகத்துடன் அவன் "கண்டிப்பாக" (sure) என்றான். இந்த புகைப்படத்தில் இருக்கும் அதே அட்டையில் நான் உட்கார்ந்துகொண்டேன். அவன் லேசாக அந்த அட்டையை தள்ளிவிட்டான், நான் சறுக்கிக்கொண்டு ஒரு மூளையில் போய் சேர்ந்தேன்.. நல்ல அனுபவம்.. லேசாக கெட்டியாகியிருந்த அந்த பனிச்சருக்கு பயணமும் மறக்கமுடியாததுதான்!

Monday 5 May, 2008

சிந்திக்க மட்டும்

அந்த செடியின் அருகிலேயே அந்த உதிர்ந்த பூ, தன் செடியை பிரிந்த பின்பும் அதன் ஸ்பரிசத்தில் தன் மீத நேரத்தை இன்பமாய் கழித்துகொண்டிருக்கிறது!

அந்த பூவிடம் இந்த பிரிவை நீ உணர்கிறாயா?
நீ இன்றோடு இறந்துபோவாய், அது உனக்கு தெரியுமா?
என்று சில கேள்விகள் கேட்க தோன்றியது..

அதனுள் இந்த சில கேள்விகள் இன்னும் எழாமல் இருக்கலாம்!
அமைதியான அந்த பூவுக்குள் கேள்விகள் என்கிற விஷத்தை செலுத்த விருப்பமில்லாமல்
அவிடத்தை விட்டு நகர்ந்தோம்...